Wednesday, October 22, 2008

பட்டாசு தீ விபத்துகளை தடுக்க 10 விதிமுறைகள்

தீபாவளிக்கு பட்டாசு தீ விபத்துகளை தடுக்க 10 விதிமுறைகள் குறித்து தீயணைப்பு துறை துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு- மீட்பு பணித்துறை சார்பில் பட்டாசு தீ விபத்துக்களை தடுக்கும் விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது.
துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
  • ராக்கெட், வாணம் மற்றும் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்களை குடிசைகள் அருகில் வெடிக்க வேண்டாம்
  • மின்சார டிரான்ஸ்பார்மர்கள், பெட்ரோல் பங்குகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்
  • குழந்தைகள் கையில் பட்டாசுகளை கொடுத்து வெடிக்க செய்யக்கூடாது
  • பட்டாசுகள் வெடிக்கும்போது நைலான், சில்க் போன்ற துணிகளை அணியாமல் பருத்தியினால் ஆன துணிகளை அணிந்து கொள்வது நல்லது
  • வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்கக்கூடாது
  • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலை 6மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
  • குடியிருப்புகள் மற்றும் மரங்கள் நிறைந்த இடத்தில் ராக்கெட் விடுவது தவிர்க்கப்பட வேண்டும். பரந்த மைதானத்தில் மட்டுமே ராக்கெட் விடவேண்டும்
  • பட்டாசு கடைகள், கேஸ் கிடங்குகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் அருகில் ராக்கெட் விடுவது தவிர்க்கப்பட வேண்டும்
  • பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும்
  • லாரிகளில் பட்டாசுகள் எடுத்து செல்லும்போது அதிக உயரத்துக்கு ஏற்றாமல், கேபின் உயரத்துக்கு மட்டும் ஏற்றி தார்பாலின் கொண்டு மூடி எடுத்துச்செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: