Friday, September 5, 2008

உங்களுக்குத் தெரியுமா..?

கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.

*உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.

*சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.

*மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.

*மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

*"வீட்டோ' என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.

*கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.

*கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.

*"குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.

*இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.

*பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.

*இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.

*அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

*மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.

* மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.

* மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.

No comments: