பெரிய கணினிகள் செய்யும் பணிகளை எளிமையாக்கும் விதத்தில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் சி. பேட் என்ற கணிப்பலகையை அறிமுகம் செய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந் நிறுவனத்தின் விழா ஒன்றில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்ட இந் நிறுவனம் இணையதள சேவை, வெப் ஹோஸ்டிங், மென்பொருள் உருவாக்கம், இணைய தள வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந் நிறுவனம் வடிவமைத்த இந்த கணிப் பலகையை பேங்க் ஆஃப் பரோடாவின் கிருஷ்ணகிரி கிளை மேலாளர் மார்க்கபந்து வெளியிட, ஐசிஐசிஐ வங்கி கிருஷ்ணகிரி கிளை மேலாளர் ராஜேஷ் பெற்றுக்கொண்டார்
தளம்: விசுவல் மீடியா
சிபேட்
Saturday, January 7, 2012
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment